2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

யாழில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கோண்டாவில் பிரதேசத்தில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி நேற்று (10) பயணித்த தபால் ரயிலுடன்  கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகில் குறித்த நபர் விபத்துக்கு உள்ளாகியிருந்தார்.

அதனையடுத்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .