Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 10 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு கடந்த 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களும் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 1 குடும்பமும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மன்னார் – உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 14 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து உப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிறைக்கைதிகளுடன் பழகிய நபர் என்பதால், விடுதலை செய்யப்பட்டவர் நேற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வட மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
33 minute ago
38 minute ago
56 minute ago