Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 14 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரணிலை கள்ளர், சூழ்ச்சிக்காரர், பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர் என பிரசாரம் செய்து ஆட்சியமைத்த ராஜபக்ஷவினர் இன்று ரணிலையே பிரதமராக்கி ஆட்சி செய்வது மிக்க கீழ்த்தரமான அரசியல் கலாசாரமாகும், எனவே ரணில், ராஜபக்ஷ இருவரையும் தோற்கடிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் குற்றங்களுக்கு எதிராக, கொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிராக ரணிலால் செயற்பட முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நேற்று(13) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில்,
இப்போது அமையப்பெற்றுள்ள அரசாங்கமானது கோட்டாபய ராஜபக்ஷவினதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கபடத்தனமான செயற்பாட்டால் உருவாக்கப்பட்டதாகும். பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கு கூட மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள முடியாத அவரால் நாட்டை ஆட்சிசெய்ய முடியாது என்றார்.
நீண்ட நாட்களுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் புறக்கணித்துவிட்டனர். அதேபோல் தனக்கு வாக்களித்த சகல தரப்பினாலும் நிராகரிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, ரணிலுடன் இணைந்து ஆட்சியை கொண்டு நடத்துவதானது எந்தவொரு ஜனநாயக அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
அதுமட்டுமல்ல, 2018ஆம் ஆண்டு சூழ்ச்சியின் மூலமாக அரசாங்கத்தை கைப்பற்றியமைக்கு ஒப்பாகவே இப்போதும் அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ளனர். அப்போது எதிரணியில் இருந்தவர்களை கொண்டு அரசாங்கத்தை அமைத்ததை போலவே இப்போதும் எதிர் முகாமில் உள்ள ஒருவருக்கு பிரதமர் பதவியை கொடுத்து அரசாங்கமொன்றை அமைத்துள்ளனர். ஆகவே ஜனாதிபதிக்கு வழங்கிய ஒட்டுமொத்த மக்கள் ஆணையையும் மீறியே இப்போது அவர் தீர்மானம் எடுத்துள்ளார்.
நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு பெருமளவிலான பங்கை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்க வேண்டும் எனவும், ரணில் மத்திய வங்கியை கொள்ளையடித்த கள்ளர், நாட்டின் வளங்களை விற்றார் எனக் கூறியே ராஜபக்ஷவினர் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டனர். அவ்வாறு கூறியவர்கள் இன்று ரணிலுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்துக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷவின் குற்றங்களுக்கு எதிராக, கொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிராக செயற்பட ரணிலால் முடியுமா? வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கியவர்களுடன் கைகோர்த்து எவ்வாறு அரசாங்கத்தை முன்னெடுக்க முடியும். ஆகவே இந்த கீழ்த்தரமான அரசியலை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். இவர்கள் அமைக்கும் அமைச்சரவைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏலத்தில் விலைபோவார்கள். எனவே காத்திருந்து பார்ப்போம் என்றும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
36 minute ago
41 minute ago