2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

Simrith   / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சுமார் 20 மில்லியன் ரூபாய் சேமிப்புடனான நடப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்புக் கணக்கு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடர்பாக இரண்டு கணக்குகளும் ஏழு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இடைநிறுத்தம் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் ஏனைய உறவினர்களுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாக முடக்கப்பட்டன.

ஜூலை 5, 2024 அன்று, ரம்புக்வெல்லவின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் ஆகியோரின் பெயரில் இருந்த 97.125 மில்லியன் ரூபாய் பெறுமதிமிக்க தனியார் வங்கி சேமிப்புகள் , ஆயுள் காப்புறுதிக் கொள்கைகள் நிலையான வைப்பு மற்றும் காப்பீட்டுக் கொள்கைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்த உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு பின்னர் ஜனவரி 4, 2025 வரை நீட்டிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7