2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படவுள்ளது

Editorial   / 2019 ஜூன் 26 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரயில் சேவையை அத்தியாவசியத்  தேவையாக மாற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையை போக்குவரத்து அமைச்சு முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை ரயில்வே சேவையில் ஓய்வுப்​ பெற்ற ரயில்வே சாரதிகள், கட்டுபாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள், சமிக்ஞை பரிசோதகர்கள், வீதி பரிசோதகர்கள், ஆகியோரை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை  எதிர்வரும் 28ஆம் திகதி காலை 9 மணியிலிருந்து நாரஹேன்பிட்டி- சாலிகா மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க ஆகியோரின் பங்களிப்பின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் எனவே இதில் ஓய்வுப்பெற்ற மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்குரியவர்கள் வந்து இணைந்துக்கொள்ளுமாறும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயம்பதி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .