2025 ஜூன் 28, சனிக்கிழமை

ரயில், தனியார் பஸ்களில் பொதிகளைக் கொண்டு செல்லத் தடை

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல பயணிகள் தனியார் போக்குவரத்து பஸ்களிலும், பொதிகளைக்  கொண்டுச் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜே​ரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று காலை கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தையடுத்து பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றிலிருந்து (21) தனியார் பஸ்களில் பொதிகளை பொறுப்பேற்க வேண்டாமென்றும் சாரதிகள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கெமுனு விஜே​ரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரயில்களிலும் பொதிகளை பொறுப்பேற்பது நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .