2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ரூபாயின் மதிப்பு திடீரென உயர்ந்தது எவ்வாறு?

Freelancer   / 2022 மே 13 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியை ரூ. 360.00 எனும் மட்டத்தில் ரூ. 2.60  வரையான ஏற்றத் தாழ்வுகளுடன் பேணுமாறு உள்நாட்டு வர்த்தக வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியினால் அறிவுறுத்தப்பட்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதர வெளிநாட்டு நாணயப் பெறுமதிகளும் இந்த அமெரிக்க டொலர் பெறுமதிக்கு நிகரான வகையில் பரிமாற்று மட்டத்தில் பேணப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்றைய தினம் (13) உள்நாட்டு வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி ரூ. 365 மட்டத்தில் காணப்பட்டது. நேற்று முன் தினம் (12) இந்தப் பெறுமதி ரூ. 380 வரை நிலவியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கற்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றான உச்சிமுனை தீவு சுவிட்சர்லாந்து நாட்டின் நிறுவனமொன்றுக்கு 30 வருட காலத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்களில் உண்மை எதுவுமில்லை எனவும், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றவுடன் இந்த பெறுமதி அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன அதற்கும் இந்த ரூபாய் மதிப்பு உயர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்பதும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையினூடாக உறுதியாகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7