2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வடக்கைச் சேர்ந்த11 பேர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

சட்டவிரோதமான முறையில், கடல்மார்க்கமாக, பிரான்ஸூக்கு தப்பிச்செல்வதற்கு முயன்ற, வடக்கைச் சேர்ந்த 11 பேரைக் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இந்த 11 பேரில், 12 வயதான சிறுமி, 10 வயதான சிறுவனும் அடங்குகின்றனர் எனத் தெரிவித்த ​பொலிஸார், ஏனையோர், 26-40 வயதுக்கும் இடபட்டவர்களாவர். அவர்கள் அனைவரும், புத்தளம் மாவட்ட நீதவான், நீதிபதி அநுர இந்திரஜித் புத்ததாஸவின் உத்தரவின் பேரில், இன்று (03) வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்திலிருந்து முந்தலம் உடப்புக்கு வருகைதந்து, அங்கிருந்து ட்ரோலர் படகின் மூலம், சட்டவிரோதமான முறையில், தப்பிச்செல்வதற்காக, புத்தளம் நகரில் தங்கியிருந்த போதே, தமக்கு கிடைத்த இரகசியத் தகவல்களின் பிரகாரம், நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் சகலருக்கும், குடிவரவு-குடியகல்வு சட்டத்தின் கீழ், பிணை வழங்குவதற்கு தனக்கு அதிகாரமில்லையென விசாரணையை நிறைவுசெய்த நீதவான், விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X