Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 11 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வத்தளை, ஹூனுபிட்டி பிரதேசத்தில், கடற்படையினரின் கட்டளையை மீறிச் சென்ற இரண்டு கார்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையால், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (11) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹூனுபிடிய கடற்படை சோதனைச் சாவடியில் வாகனமொன்றைச் சோதனை செய்ய முற்பட்ட போது, அந்த வாகனம் கட்டளையை மீறி, கடமையில் இருந்த கடற்படை வீரரொருவரை மோதிவிட்டுச் செல்ல முயன்றுள்ளது.
இதன்போது, மற்றொரு வீரரால் அந்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின், மற்றொரு காரும் படையினரின் கட்டளையை மீறி செல்ல முற்பட்ட போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அந்தச் சாரதி, காயமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு சாரதிகளும், மதுபோதையில் இருந்துள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago