2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘ வன்மையாகக் கண்டிக்கின்றேன் ’

Editorial   / 2019 ஜூன் 25 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால், களுத்துறை வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களின் ​கையெழுத்துப் பெறும் நடவடிக்கைக்கு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆதரவாளர்கள் தடை ஏற்படுத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ​ராஜிதவின் இந்த செயற்பாட்டை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மு​டியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக, பொதுமக்களின் கையெழுத்து பெறும் நடவடிக்கையொன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால், களுத்துறை வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் ராஜிதவின் ஆதரவாளர்கள் சிலர் இந்த நடவடிக்கையை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டதால், அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்து.

இதேவேளை இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் களுத்துறை மாவட்டத்திலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் நேற்று பகல் 12 மணிக்கு ஆரம்பித்த பணிப்புறக்கணணிப்பு இன்று காலை 8 மணிக்கு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .