2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெளிநாடுகளில் இருந்து வருவோரால் பெரும் ஆபத்து

Freelancer   / 2025 ஜூன் 25 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்புவோர்  மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலம் மீண்டும்  மலேரியா பரவ வாய்ப்புள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு திட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் இந்தீவரி குணரத்ன குறிப்பிட்டார்.

அவ்வாறு இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு நோய்த்தொற்றுடன் வருகைத்தந்த சுமார் 15 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மலேரியா இலங்கையில் இருந்து முழுமையாக ஒழிக்கப்பட்ட  நுளம்புகள் மூலம் பரவும் ஒரு தொற்று நோயாகும்.  எனினும் வருடாந்தம் பல மலேரியா நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைத்தந்தவர்களே இவ்வாறு நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன,  நாட்டில் நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டிருப்பினும் நோய்க்காவியான நுளம்புகள் பரவியுள்ளமையால் நோயாளர்களிடம் இருந்து ஏனையோருக்கு நோய் பரவவாய்ப்புள்ளது.

ஆகையால் வெளிநாடு செல்வோர் மலேரியா நோய்க்கான தடுப்பூசியை பெறுவது அவசியம்  நாடளாவிய ரீதியில் உள்ள மலேரியா கட்டுப்பாட்டு நிலையங்களில்  இவற்றை  இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .