2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்பாட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்களால் ஆர்பாட்டம் மற்றும் பணிபுறக்கணிப்பு இன்று (02) முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலை வளாகத்தில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் முற்பகல் 11 மணிவரையும் இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமது பணி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுத்தும் வகையில் கைவிரல் அடையாள பதிவுசெய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தவிர்த்து பழைய முறையின்படியே தாங்கள் கையொப்பம் இடுவதற்கான செயற்பாட்டை தொடரவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.

எனினும், தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “அரச சட்டங்கள் அனைவருக்கும் சமன், எமக்கு மட்டும் ஏன் இந்த அநீதி, மன அமைதியுடன் பணிசெய்ய விடு” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .