2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வாகனங்களுடன் 304 பேர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, வீதி விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 304 பேர் அவர்களுக்குச் சொந்தமான 304 வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது மதுபோதையில் வாகனம் செலுத்து உள்ளிட்ட  3791 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று இரவு  எட்டு மணித் தொடக்கம் அதிகாலை நான்கு மணிவரையில்  493 பொலிஸாரை களமிறக்கி முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர். 

அத்தோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற வழக்குடன் தொடர்புட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .