2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் மூன்று பெண்கள் பலி

Editorial   / 2019 ஜூன் 30 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று  (30) அதிகாலை 4.30 மணியளவில் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புத்தேகம- அநுராதபுரம் வீதியில் மொரகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

தம்புத்தேகமயிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த வானொன்றும், எதிர்த்திசையில் வந்த லொறி ஒன்றும் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் வானில் பயணித்த 3 ஆண்களும் 3 பெண்களும் படுங்காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குறித்த 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 58 வயதுடைய நூர்தீன் பௌசியா உம்மா, 32 வயதுடைய தாஹிர் தஸ்மியா, 23 வயதுடைய சஹாருக் நீசா என்ற கர்ப்பிணித் தாயுமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் விஜிதபுர பகுதியைச் சேர்ந்தவர்களென்றும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .