2025 ஜூன் 18, புதன்கிழமை

வாக்களிக்க வந்தவர்கள் புனா​னைக்கு அனுப்பப்பட்டனர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய, சுயதனிமைப்படுத்தப்பட்ட லங்காபுர பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மூவர், உடனடியாக புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று குறித்த மூவரும்  வாக்களிக்கச் சென்று வீடு திரும்பிய போது, பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார், பெர்துசுகாதார பரிசோதகர் ஆகியோர் இது​தொடர்பில் தவிசாளரிடம் வினவிய போது, அவர் வாக்களித்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய, பிரதேச சபையின் தவிசாளர், அவரது மனைவி, மற்றும் பிள்ளையும் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்டனரென, லங்காபுர பிரதேச சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .