2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்காளர்களின் வீடுகளுக்கே வாக்காளர் அட்டைகள்  விநியோகம் செய்யப்படவுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக தபால் திணைக்களத்தின் 75,000 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள், கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 29 ஆம் திகதியின் பின்னர் தபால் ஊழியர்களை பயன்படுத்தி வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட மாட்டாது என பிரதி தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிய காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், தாம் வசிக்கும் பகுதியிலுள்ள தபால் நிலையத்துக்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக் கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .