2025 ஜூன் 25, புதன்கிழமை

வாக்காளர் படிவங்களை விரைவில் கையளிக்கவும்

Editorial   / 2019 ஜூன் 03 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்காளர் படிவங்களை விரைவில் பூர்த்தி செய்து, உரிய அதிகாரிகளிடம் அவற்றை கையளிக்குமாறு, ​ நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கெபே) பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைகளின் காரணமாக, வாக்காளர் படிவங்களை பூர்த்திச் செய்து கையளிப்பதில், பொதுமக்கள் கூடுதல் நாட்டம் கொள்ளாத நிலை காணப்படுவதாக, குறித்த அமைப்பின் பதில்  நிறைவேற்றுப் பணிப்பாளர் ​அஹமட் மனாஸ் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் படிவங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் இருப்பின், கிராம அலுவலரிடம் சென்று,  படிவங்களை பெற்று பூர்த்திச் செய்து அவற்றை கையளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .