Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
தமிழர்களே இந்நாட்டின் பூர்வீகக் குடிகளென நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஆற்றியிருக்கும் உரை ஆதாரமற்ற அப்பட்டமான பொய்யெனத் தெரிவிக்கும் அமைச்சர் உதய கம்மன்பில, தமிழர்களே பூர்வீகக் குடிகள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.
இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “இலங்கையின் முதற்குடிகள் தமிழர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தனது உரையில் கூறியிருந்தார். இது எந்தவிதமான தொல்பொருள் ஆதாரமற்ற அப்பட்டமான பொய். யாழ்ப்பாண வைபவமாலை வருவதற்கு முன்னர் தமிழ் மக்களுக்கு ஒரு புத்தகம் இல்லை. 11 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான எந்தவோர் ஆதாரங்களும் இல்லை.
அச்சுறுத்தி நாட்டின் வரலாற்றை மாற்றியமைக்க முடியாது. தமிழர்கள் இந்நாட்டின் முதற் குடிகள் என்று விவாதிக்கத் தன்னுடன் விவாதத்துக்கு வரவேண்டுமென விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். அவர் ஆதாரங்களுடன் அந்த விவாதத்துக்கு வர வேண்டும். அப்படி வந்தால் அவரின் ஆதாரங்கள் அனைத்தும் பொய்யென என்னால் நிரூபிக்க முடியுமெனவும் கூறியிருந்தேன். ஆனால், அதற்கு விக்னேஸ்வரன் எந்தவிதமான பதில்களையும் இதுவரையில் வழங்கவில்லை” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago