2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன், மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து, ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறி்க்கை இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவரும், ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான, அனில் குணர்தனவால் இந்த அறி்க்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் கடந்தாண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதிக்குள் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனம், மிஹின் லங்கா விமான நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய, கடந்தாண்டு ஜனவரி மாதம் இந்த விசாரணை ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .