2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஐந்து விரிவுரையாளர்கள் காயம்

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா - வெல்லச பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஐவர் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (02) அதிகாலை 2.50 மணியளவில் பதுளை - மஹியங்கனை வீதியில் துன்ஹிந்த சந்தியில் சொரணதொட்ட பகுதியில் விரிவுரையாளர்கள் பயணித்த கார், வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

இதன்போது, காரில் பயணித்த ஐவரும் காயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பெண் விரிவுரையாளர்கள் நால்வரும் ஆண் விரிவுரையாளர் ஒருவரும்  படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவர் கர்ப்பிணி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .