2025 ஜூன் 18, புதன்கிழமை

விபத்தில் தாய் - மகள் உயிரிழப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று (10) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த  தாய் மற்றும் மகள் ஆகியோர்  படுகாயமடைந்த நிலையில் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

42 வயதுடைய தாய் மற்றும் 19 வயது மகள் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .