2025 ஜூன் 19, வியாழக்கிழமை

விபத்தில் நால்வர் படுகாயம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சனகுமார ஆரியதாஸ

தம்புளை- ஹபரணை பிரதான வீதியின் திகம்பதன பிரதேசத்தில் இன்று அதிகாலை (31) இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்து, தம்பு​ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சீகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காரில் பயணித்த இருவரும் லொறியில் பயணித்த இருவருமே காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்தவர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், இந்த காரானது, வலஸ்முல்ல பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .