2025 ஜூன் 16, திங்கட்கிழமை

விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ மற்றும் பத்தேகமவுக்கிடையில் 92.5ஆம் மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 9  பேர் காயமடைந்து காலி-கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வான் ஒன்றின் பின்னால் பயணித்த தனியார் பஸ்ஸொன்று வான் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வானில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளதாகவும் பின்னதுவ  காவலரண் பெலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (28) இடம்பெற்ற இந்த விபத்தில் ஹம்பந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற பயிற்சி வேலைத்திட்டம் ஒன்றுக்காக வானில் பயணித்த, ​விவசாய திணைக்களத்துடன் தொடர்புடையவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

92.5ஆம் மைல்கல் பிரதேசத்தில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாயிருந்ததால், வேகமாக பயணித்த வானின் வேகம் குறைக்கப்பட்டதையடுத்து, பின்னால் வந்த பஸ் வானின் மீது மோதியுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .