Janu / 2025 ஜூன் 10 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டமாவடி தியாவட்டுவான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை , பிறைந்துரைச்சேனை பகுதியை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் விமான நிலையம் சென்று திரும்பி வரும் வழியில் மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி தியாவட்டுவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள மதகில் மோதுண்டதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது வேனில் பயணித்த நான்கு பெண்கள் இரண்டு குழந்தைகள் உள்ளடங்களாக பணிரெண்டு பேரும் காயமடைந்துள்ளதுடன் அனைவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்காரணமாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பிரதான நீர் குழாயில் சேதமேற்பட்டுள்ளதாக அதிகார சபையின் அதிகாரி தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்


32 minute ago
39 minute ago
48 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
48 minute ago
49 minute ago