Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 20 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து நபர்களையும் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்வதற்கான புதியத் திட்டமொன்றை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது.
இந்த வேலைத்திட்டம், மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
60 வைத்தியசாலைகளில், இந்தத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மருத்துவ வசதிகள், சுகாதார சேவைகளை வழங்கவுள்ளதாகவும் டொக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
எனினும், வழமை போல நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மருத்துவ சேவைகளை எவ்வித இடையூறுமின்றி அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதேச வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
3 hours ago