Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 27 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷியாப்தீனுக்கு எதிராக, முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இவர் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர் என்றோ, சட்டவிரோதமான முறையில் சொத்து சேகரித்தவர், தாய்மார்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டார் போன்ற எவ்வித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அறிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் குருநாகல் நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியர் ஷாபியைக் கைதுசெய்த விடயத்தில் முறைகேடு இடம்பெற்றிருப்பதாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வைத்தியர் 3479 சிங்கள தாய்மாருக்கும் 860 முஸ்லிம் தாய்மார், 33 தமிழ் தாய்மாருக்கும் சிசேரியன் செய்துள்ளதாக, குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்த்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
22 Jun 2025