Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kanagaraj / 2015 ஒக்டோபர் 09 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி,ஓந்தாச்சிமடம் எல்லைப்பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் ஓந்தாச்சிமடம் காளிகோவில் வீதியை சேர்ந்த வை.டிலுசன்(20வயது), ஆர்.கோகுலன்(வயது20)எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்போது முச்சக்கர வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
35 minute ago
2 hours ago