Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாதம்பே பொலிஸ் பிரிவில் புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் 62 மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை(28) காலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதுடன் விபத்தில் உயிரிழந்த நபர், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
உயிரிழந்த நபர் 50 வயதுடையவர் எனவும் இவர் நீல நிற டீ-சேர்ட் மற்றும் காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் நீதவான் நீதிமன்ற நீதவானின் ஊடாக மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago