2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விமானப்படை வீரர் உயிரிழப்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமானப் படை முகாமில்; கடமையாற்றும், 22 வயதான விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது நெஞ்சுப் பகுதிக்கு துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட அவர், படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிப்பாய் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ரனுத் ஹன்சிக விஜேரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்த சீதுவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .