2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஹே​ரோயினுடன் வனப் பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

Editorial   / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த வனப் பாதுகாப்பு அதிகாரியொருவர் கந்தர, தெவிநுவர பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

கந்தர பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் போது அவர் ஹம்பாந்தோட்டை வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் அலுவலகத்தின் பணியாற்றுபவர் எனவும், அவரிடமிருந்து 2 கிராம் 100 மில்லிகிராம் நிறைவுடைய ஹெரோயின் மீட்​கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .