2025 ஜூன் 09, திங்கட்கிழமை

'அமைதியான தீர்வுகள் அவசியம்'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தெற்காசிய பிராந்தியத்தினதும் முழு உலகத்தினதும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு, பொருளாதார ஒத்துழைப்புடன் கூடிய பிரச்சினைகளுக்கான அமைதியான தீர்வுகள் அவசியம்;' என பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சையத் சகில் ஹுசைன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற பாகிஸ்தானின் 70ஆவது சுதந்திர தின விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பாகிஸ்தான் அனைத்து நட்பு நாடுகளுடனும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அயல்நாடுகளுடன் அமைதியான உறவை பேணுவதற்கும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

மேலும், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான வரலாற்று ரீதியான உறவானது கந்தாரா கலாசாரம் மற்றும் இந்து வெளி நாகரீகம் தொட்டு பழமை வாய்ந்தது. இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது' என்றார்.

'அத்துடன், பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரிப்பின் இலங்கை விஜயமானது இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்துக்கு சிறந்த சாட்சியாக அமைந்துள்ளது. அவரின் விஜயத்தின்பொழுது இரு நாடுகளும் உயர் கல்வி, கைத்தொழில் அபிவிருத்தி, கப்பல் துறை, அணுவாயுத தொழில்நுட்பத்தினை சமாதான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துதல் மற்றும் நிபுணத்துவர்களை பரிமாறிகொள்ளுதல் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பினை அதிகரிக்க இணக்கம் காணப்பட்டதுடன், உயர்மட்ட தூதுக்குழுக்கள் மூலம் அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது' எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5