2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

6 கோடி ரூபாய் தங்கத்துடன் மூவர் சிக்கினர்

Princiya Dixci   / 2016 மே 23 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 கிலோகிராம் நிறைகொண்ட, 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை நாட்டுக்குள் கடத்துவதற்கு முயன்ற, பெண்கள் மூவரை கட்டுநாயக்க பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

டுபாயிலிருந்து இலங்கைக்கு திரும்பிய அந்த மூவரும், தங்களுடைய பயணப்பொதிகளுக்குள் மறைத்துவைத்தே, தங்கத்தை கடத்துவதற்கு முயன்றுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தில் தங்கபிஸ்கட்டுகள் 4 கிலோ கிராமும், ஏனையவை தங்கச்சங்கிலி, கைவலையல் மற்றும் பெண்டன் ஆகியனவும் அடங்குகின்றன என்று சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .