2025 ஜூன் 09, திங்கட்கிழமை

'தேசிய அரசாங்கத்தின் கொண்டாட்டத்தில் அரச சொத்துகளை பயன்படுத்தாதீர்கள்'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சிக்காக உருவாகிய தேசிய அரசாங்கத்தின் முதலாவது மாநாட்டுக்காக அரச பணம் மற்றும் சொத்துக்களை பயன்படுத்த வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் முதலாவது மாநாடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில், இன்று வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் நடைபெறுகின்றது.

முதலாவது வருட நிறைவு விழாவில், கடந்த ஒரு வருட காலத்தில் நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நல்லாட்சி அராசாங்கம் செயற்படுத்தியமை குறித்து விரிவாக விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைய, குறைந்தளவான பொருட் செலவில் இந்த முதலாவது ஆண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

6 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

6 hours ago - 0     - 6

மன்னிப்பு

6 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

6 hours ago - 0     - 5