Freelancer / 2026 ஏப்ரல் 06 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனமல்வில, (குடா ஓயா) பகுதியில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை, இந்த மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதவான் நீதிமன்றம் சனிக்கிழமை (04) அன்று உத்தரவிட்டது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் குடா ஓயா, பலஹருவ வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் தணமல்வில தலைமையக பொலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த சந்தேகநபர் அப்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தணமல்வில தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம்.பி. பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில், தனமல்வில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)
10 minute ago
22 minute ago
41 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
41 minute ago
55 minute ago