2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

11,000ஐ கடந்தன கொரோனா மரணங்கள்

Freelancer   / 2021 செப்டெம்பர் 11 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

70 ஆண்களும் 87 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்ட 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 23 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் 4 பேரும்  மரணித்துள்ளனர்.

அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 11,152 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 1,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  482,360 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X