2025 ஒக்டோபர் 09, வியாழக்கிழமை

12 கிலோகிராம் போதைப்பொருளுடன் பெண் கைது

Freelancer   / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவத்தை - பியன்வில பகுதியில் 12 கிலோகிராம் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் இருந்து 2 கிலோகிராம் ஐஸ், 1 கிலோகிராம் ஹஷிஷ் மற்றும் 9 கிலோகிராம் ஹெரோயின் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

கைதான பெண் 32 வயதுடையவர் என்றும், ஆணுக்கு 26 வயது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்கள் இன்று (9) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X