Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கூறியுள்ளார்.
இவர்களுள் சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட 11 பேர் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
தடைசெய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலைக்குள் கொண்டு சென்றமை தொடர்பில் இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த வாரம், பூசா, நீர்கொழும்பு, வாரியபொல மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளில் இருந்த 21 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .