Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் சமர்ப்பித்திருக்கும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் வகையில், எதிர்க்கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம், ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு குழுக்களைச் சேர்ந்த ஒன்பது பேரை, ஆளும் தரப்புக்கு இழுத்தெடுக்கும் வகையிலேயே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த சிலருடனேயே அரசாங்கம் இவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதென அறியமுடிகின்றது. அந்த ஒன்பது பேர் தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
ஆங்கில ஊடகமொன்றில் வெளியாகியிருக்கும் அந்தச் செய்தியில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீன் ஆகிய இருவரையும், அந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் அரசாங்கத்துக்குள் இணைத்துக்கொள்வதில்லை என்ற முடிவில், அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருக்கும் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின், அரசாங்கத்துக்கு இன்னும் இரண்டு உறுப்பினர்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
19 Jun 2025
19 Jun 2025