Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு புரட்சிகளை நடத்தி முடிந்த போதிலும் மூன்றாவதாகவும் புரட்சியொன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்து கிராமிய அபிவிருத்தியை துரிதப்படுத்துவதே இந்த மூன்றாவது புரட்சியாகும். இதனை மேற்கொள்ளுமாறு மல்வத்து மகாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) ஆலோசனை வழங்கினார்.
நாட்டின் அடுத்த பிரதமராக கடந்த வெள்ளிக்கிழமை (21) பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
அங்கு முதலில், அஸ்கிரிய மகாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பிரதமர், பின்னர் தலதா மாளிகையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
பின்னர், மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெறும்போதே தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
52 minute ago
1 hours ago
3 hours ago