2025 மே 17, சனிக்கிழமை

தேர்தல் மனு தயாரிக்க முஸ்தீபு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் குறித்த மனுவொன்றுக்கான தகவல்களைத் திரட்டி வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிட்டகோட்டை, பாகொட வீதியில் அமைந்துள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. வாக்குப்பெட்டிகளை சீல் வைப்பதற்கு அரக்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய மனுவொன்று தயாரிக்கப்பட்டு விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்' என்று அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .