2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் பெண் பலி: இருவர் காயம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறையிலிருந்து பண்டாரவளை நோக்கி சென்று கொண்டிருந்த வானொன்று பண்டாரகம வீவிட்ட வீதியால் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் பயணித்த 34 வயதான பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்து பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீவிட்ட வீதியால் சென்று கொண்டிருந்த வானொன்று கட்டுப்பாட்டை இழந்து  மோட்டார் சைக்கிளொன்றுடன்  மோதி, பின்னர் மரமொன்றுடன் மோதியுள்ளது.

வான் சாரதியும் அதில் பயணித்த ஒருவருமே காயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X