2025 மே 19, திங்கட்கிழமை

பொலிஸாருக்கு புதிய பலூன்

Gavitha   / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை பரிசோதிப்பதற்காக பயன்படுத்தப்படும் பலூன் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் அறிவித்தனர்.

இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பலூன், எல்கோலய்சர் என்ற ஸ்ரோவினால் ஊதப்பட்டு பின்னர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

புதிய முறையின் பிரகாரம், புதிய பலூன், சாதாரணமாக சந்தேகநபரிடம் ஊதுவதற்கு கொடுக்கப்படும். அதன்பின்னர் எல்கோலய்சர் என்ற ஸ்ரோ பலூனில் பொறுத்தப்படும். காற்றுடன் கலக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

பழைய பலூனைப் பயன்படுத்தும்போது சாரதியை சோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் அந்த பலூனை நைட்ரோ செலிலோசு இட்டு சீல் வைக்கவேண்டும். எனினும் புதிய பலூனில் அந்த முறையை பின்பற்றவேண்டியதில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய பலூனில், எல்கோலய்சர் ஸ்ரோ தனியாக இருப்பதனால் பயன்படுத்தியதன் பின்னர் தானாகவே சீல் வைத்துக்கொள்ளும். இதனால், சந்தேகநபர்கள் தலா ஒரு பலூனை பயன்படுத்திகொள்ள முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X