2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

’2019 இல் பால் உற்பத்தி சரிந்தது’

Editorial   / 2020 செப்டெம்பர் 11 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்   

2019ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில், கால்நடைகளுக்கு ஏற்பட்ட கால்வாய் நோய் காரணமாக, இலங்கையின் மொத்தத் தேசிய பால் உற்பத்தி வீழ்ச்சி  அடைந்ததாக, மத்திய வங்கியின் 2019ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019ஆம் ஆண்டு இலங்கையின் மொத்தப் பால் உற்பத்தி, 6.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. பசும்பால் உற்பத்தி 374 மில்லியன் லீற்றர்களுக்கு 4.5 சதவீதத்தால் குறைவடைந்த அதேவேளை, எருமைப்பால் உற்பத்தி,  73.6 மில்லியன் லீற்றர்களுக்கு 14.4 சதவீதத்தால் குறைவடைந்தது.   

இதேவேளை, 323,490ஆக இருந்த கறவைப் பசுக்களின் எண்ணிக்கை, 1.8 சதவீதத்தால் குவைடைந்தது என்றும் 91,790ஆக இருந்த கறவை எருமைகளின் எண்ணிக்கை, 2.6 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது என்றும் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பால் உற்பத்திக்கான சராசரி செலவு உயர்வடைந்திருந்தது என்றும் இதனால் வேளாண்மையாளர்களுக்கு குறைந்தளவு வருமானமே காணப்பட்டது என்றும் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .