2025 ஜூலை 03, வியாழக்கிழமை

2026இல் e-NIC திட்டம்?

S.Renuka   / 2025 ஜூலை 02 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை (e-NIC) உருவாக்க இந்திய நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த செயல்முறைக்கு 04 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

நிதிச் சுமையைச் சமாளிக்க, இந்த செலவில் பாதியை இந்தியாவின் உதவி மூலம் ஈடுகட்ட அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றும் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெளிவுபடுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .