R.Maheshwary / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை நாள்கள் ஒரு வாரமாக குறைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடங்களை பூரணப்படுத்துவதற்கான தேவையை கருத்திற்கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரையும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இதனால், மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை வழங்க முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
32 minute ago
35 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
35 minute ago
47 minute ago