2025 ஜூன் 19, வியாழக்கிழமை

376 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, டுபாய், கென்யா, கட்டார் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 376 இலங்கையர்கள் இன்று (23) அதிகாலை கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்

.இதற்கமைய, அவுஸ்திரேலியாவிலிருந்து 239 இலங்கையர்களுடன் வந்த விமானம், இன்று அதிகாலை 3.38 மணியளவில் மத்தள விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானத்தில் வந்தவர்களுள் அதிகமானோர் உயர்கல்வி மற்றும் தொழிலுக்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டுபாயிலிருந்து 35 பேரும் கென்யாவிலிருந்து 83 பேரும் கட்டாரிலிருந்து 19 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .