2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

4 வான்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல்- தெலியாகொன்ன பிரதேசத்தில் ​இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது,  பதிவு செய்யப்படாத 4 சிறிய வான்களும், 32 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட வான்கள் கடந்த வாரம் கொச்சிக்கடைப் பகுதியில் தாக்குதல் நடத்த பயன்படுத்த திட்டமிட்டிருந்த வானை ஒத்தது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரின் வீட்டிலிருந்து 2 வாள்களும் 4 அலைபேசிகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசார​ணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .