2025 ஜூன் 28, சனிக்கிழமை

40 பேர் இதுவரையில் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, சந்தேகத்தின் பேரில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என,பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஒரு தொகை தங்க ந​கைகளை, 300 இலட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர்  நேற்றிரவு (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், கிளிநொச்சி தர்மபுறம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன், பொலிஸார் நால்வரும் தொடர்புப்பட்டுள்ளனரென தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை இன்று (23) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .