2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமில்லை’

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை அனைத்து மானவர்களுக்கும் கட்டாயமில்லை எனக் குறிப்பிட்டு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சையில் சகல மாணவர்களும் தோற்றுவது கட்டாயம் எனத் தெரிவித்து கல்வி அமைச்சால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபத்தை இரத்துச் செய்யுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடந்த வாரம் அறிவுரை வழங்கியிருப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்தப் பரீட்சைக் குறித்து  ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுவின் பரிந்துரைக்கமையயே கல்வி அமைச்சர் குறித்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .