2025 ஜூன் 28, சனிக்கிழமை

5 இடங்களில் வெ​டிப்புச் சம்பவம்

Editorial   / 2019 ஏப்ரல் 21 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 5 இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், கட்டுவான ​தேவாலயம், கிங்க்ஸ்பரி ஹோட்டல்,  சங்கிரில்லா ஹோட்டலின்  மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட் ஹோட்டலிலும், கிங்ஸ்பரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இச்சம்பவங்களில் காயமடைந்தவர்கள் ​ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 50 பேருக்கு ​அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மேலும் பலர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .